tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
திருமலை திருப்பதி தரிசனம்: தினமும் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரிலேயே விநியோகம்! பெறுவது எப்படி?
திருமலை திருப்பதி தரிசனம்: தினமும் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரிலேயே விநியோகம்! பெறுவது எப்படி?

திருமலை திருப்பதி தரிசனம்: தினமும் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரிலேயே விநியோகம்! பெறுவது எப்படி?

thirupathi_thumb

தற்போது நாள் தோறும் முப்பதாயிரம் பேருக்கு மேல் தரிசனம் செய்துவரும் நிலையில் படிப்படியாக தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் புனிதத் தலங்களில் முக்கியமானது திருமலை திருப்பதி. நாள் தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் எனப்படும் சர்வ தரிசன டிக்கெட்களை நாளை முதல் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.


இதுவரை இணையம் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. அதிலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்குபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கான டிக்கெட்களின் விற்பனை தொடங்கிய பத்தே நிமிடங்களில் அவை முடிந்துவிடும் நிலை இருந்தது. இதனால் பல லட்சம் எளிய பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய முடியாமல் வருத்தத்தில் இருந்தனர். அவர்களின் வருத்தத்தைப் போக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.


நாளை (15.2.2022) முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவற்றை பக்தர்கள் நேரிலேயே சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் நாளைக் காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதைப் பெற்றுக்கொள்ள ஆதார் அட்டை அவசியம். மேலும் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.


இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் 16-ம் தேதி (புதன்கிழமை) காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது நாள் தோறும் முப்பதாயிரம் பேருக்கு மேல் தரிசனம் செய்துவரும் நிலையில் படிப்படியா தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார். அறுபதாயிரத்திலிருந்து அறுபத்தி ஆறாயிரம் வரையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு ஏழுமலையானின் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.